Monday, December 31, 2018

•போங்கடா நீங்களும் உங்கட கருப்பு சட்டையும்!

•போங்கடா நீங்களும் உங்கட கருப்பு சட்டையும்!
ஈழத் தமிழருக்காக இறந்தவர்கள் என்று முத்துக்குமாருக்கும் அப்துல் ரவூப்பிற்கும் அஞ்சலி செலுத்துகிறீர்கள்.
ஆனால் கொடைக்கானலில் ஈழத் தமழருக்காக உயிர்விட்ட தமிழ்மாறன் பெயரை ஏன் உச்சரிக்க மறந்தீர்கள்?
சரி. பரவாயில்லை. தமிழகத்தில் இருந்து வந்து ஈழத்தில் போராடி உயிர் விட்டவர்களில் ஒருவர் பெயரைக்கூட ஏன் கூற தயங்குகிறீர்கள்?
அவர்கள் செய்தது தியாகம் இல்லை என்கிறீர்களா? அவர்கள் பெயர் உச்சரிக்க தகுதியில்லை என்று கருதுகிறீர்களா?
சரி. எப்படியாவது போங்கள். ஆனால் தமிழீழத்திறற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறீர்கள்.
அதேவேளை தமிழகத்தில் இருக்கும் சிறப்புமுகாமை மூட வேண்டும் என்று ஒரு தீர்மானம் போட ஏன் உங்களுக்கு தோன்றவில்லை?
பாவணிசாகரில் இருந்து அகதிகளை வெளியேற்ற வேண்டும் அல்லது அடைத்து வைக்க வேண்டும் என்று கம்யுனிஸ்ட் தலைவர் கேட்கிறார்.
அதற்கு எதிராக ஒரு கண்டனம்கூட விடமுடியாத நீங்கள் தமிழீழத்திற்கு வாக்கெடுப்பு கோருவதை மகிந்த ராஜபக்ச அறிந்தால் அந்தாள் குண்டியால் சிரிப்பார்.
போங்கடா நீங்களும் உங்கட கருப்பு சட்டையும்.

No comments:

Post a Comment