Thursday, December 27, 2018

காலம் மாறிப் போச்சு!

காலம் மாறிப் போச்சு!
வீரமணி- வைகோ! முன்னாடி மாதிரி இல்லையப்பா. இப்பெல்லாம் உடனுக்குடன் பேஸ்புக்கில் மீம்ஸ் போட்டு கலாயக்கிறாங்கப்பா.
வைகோ- ஆமாம் ஆசிரியரே! உண்மைதான்.
வீரமணி- ஸ்டாலினைத்தான் ஆதரிப்பதென்றால் எதற்காக கறுப்பு சட்டை போட்டு பெரியாரை படிக்க வேண்டும்? ஸ்ரெய்டா திமுக கரை வேட்டி கட்டிக்கொண்டு ஆதரிக்கலாமே என்று கேட்கிறாங்கப்பா.
வைகோ – ஆமா ஆமாம், தம்பி திருமாவும் சொல்லிச்சு. ஸ்டாலினை முதல்வராக்குவதற்கு எதற்கு அம்பேத்காரை படிக்க வேண்டும் என்று கேட்கிறார்களாம்.
வீரமணி- காலம் ரொம்ப மாறிப்போச்சு. இனிமே எங்க பிழைப்பில மண் விழுந்திடும்போல கிடக்கு.

No comments:

Post a Comment