Thursday, December 27, 2018

உலகத் தமிழினத் தலைவரா?

உலகத் தமிழினத் தலைவரா? அல்லது
உலக திராவிட இனத் தலைவரா?
இவர் வாழ்நாள் முழுவதும் பேசியது திராவிடம்
இவரது கட்சியின் பெயர் திராவிட முன்னேற்ற கழகம்
ஆனால் இவருக்கு வழங்கிய பட்டம் “ உலக தமிழின தலைவர்”
“தமிழா தமிழா என்னை நீ கடலில் வீசி எறிந்தாலும் கட்டுமரமாக மாறி உனக்கு உதவுவேன்” என்றார்.
ஆனால் தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் அழிக்கப்பட்டபோது இந்த கட்டுமரம் முள்ளிவாய்க்காலுக்கு வரவில்லை.
மாறாக டில்லிக்கு சென்று தன் மக்களுக்கு அமைச்சு பதவி பெற்றுக் கொண்டது.
வெறும் மஞ்சள் பையுடன் ரயிலேறி வந்தவர் எப்படி தன் குடும்பத்திற்கு 40 ஆயிரம் கோடி சொத்து சேர்த்தார் என்று நான் கேட்கப் போவதில்லை.
ஆனால் அன்று மட்டும் அந்த ரயிலில் ரிக்கட் செக்கர் இருந்திருந்தால் தமிழ்நாட்டு வரலாறு வேறு விதமாக இருந்திருக்குமோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

No comments:

Post a Comment