Thursday, December 27, 2018

பெரியார் முன்வைத்த தமிழ்நாடு விடுதலையைக்கூட

பெரியார் முன்வைத்த தமிழ்நாடு விடுதலையைக்கூட உரத்து கூற முடியாதவர்கள் எதற்கு பெரியார் பெயரை உச்சரிக்க வேண்டும்?
ஸடாலினை முதலமைச்சராக்குவதற்கும் ராகுல்காந்தியை பிரதமராக்குவதற்கும் எதற்கு பெரியாரை படிக்க வேண்டும்?
கருப்பு காவிக்கு பதில் அல்ல. அது இன்று சிலருக்கு பிழைப்பு.
தெலுங்கர் தம்மை தெலுங்கராகவே உணருகின்றனர்
கன்னடர் தம்மை கன்னடராகவே உணருகின்றனர்
மலையாளிகள் தம்மை மலையாளிகளாகவே உணருகின்றனர்
தமிழன் மட்டும் தம்மை ஏன் திராவிடனாக உணர வேண்டும்?
தமிழருக்கு தேவை தமிழ்தேசிய உணர்வு
தமிழர் முன்னெடுக்க வேண்டியது தமிழ்நாடு விடுதலை.
தோழர் தமிழரசன் காட்டிய பாதை இதுவே.
குறிப்பு – மண்ணின் மைந்தர்களுக்கே வேலை என்று மத்தியபிரதேச முதல்வர் கூறியுள்ளார். ஆனால் அவரை இனவாதி என்று யாரும் இதவரை கூறவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தமிழருக்கு மன்னுரிமை கொடுக்க வேண்டுமென்றால் உடனே எச்ச.ராசாக்கள் இதனை இனவாதம் என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment