Monday, January 31, 2022

எந்தவித பொலிஸ் பாதுகாப்பும்

எந்தவித பொலிஸ் பாதுகாப்பும் இன்றி சுமந்திரன் வயலில் விவசாயம் செய்கிறார். எந்தவித பொலிஸ் பாதுகாப்பும் இன்றி சுமந்திரன் கடலில் செல்கிறார் எந்தவித பொலிஸ் பாதுகாப்பும் இன்றி சுமந்திரன் பொங்கல் பானை வழங்குகிறார். இதுவரை அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால் அவரை கொல்ல முயன்றதாக 20 க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்கள் சிறையில் சித்திரவதை அனுபவிப்பது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் அவர்கள் இன்றி அவர்களது குடும்பங்கள் மிகவும் கஸ்டப்படுகின்றன. எனவே சுமந்திரன் இந்த அப்பாவி தமிழ் இளைஞர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களின் விடுதலைக்கு வழி செய்ய வேண்டும். சுமந்திரன் தம்பிகள் இதை கவனத்தில் கொள்வார்களா?

No comments:

Post a Comment