Monday, January 31, 2022

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF)தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஈழத்தை கைவிட்டுவிட்டார் புரட்சியை கைவிட்டுவிட்டார் விடுதலையையும் கைவிட்டுவிட்டார் அப்புறம் இன்னும் எதற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பெயர் வைத்திருக்கிறார்? அவர் “இந்திய தீர்வு 13 ஐ பெறும் முன்னணி” என பெயரை மாற்றிக்கொள்வது பொருத்தமாக இருக்கும் அதுமட்டுமல்ல கஜேந்திரகுமார் அணியினரை அவர் தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கிறார். அதேபோல் அவர்களும் இவரை, கனடாவில் இருக்கும் மகளுக்கு டில்லி மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்க சீட்டு பெற்றதற்காகவும், டில்லி சென்னை போன்ற இடங்களில் இருக்கும் கட்சியின் வீடுகள் மற்றும் சொத்துகளை பாதுகாப்பதற்காகவுமே, இந்திய விசுவாசியாக இருக்கிறார் தமிழ் மக்கள் நலனுக்காக அல்ல தமது சொந்த நலனுக்காகவே இந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் என பதிலுக்கு விமர்சிக்க எவ்வளவு நேரமாகும்? எனவே சுரேஸ் பிரேமசந்திரன் நாகரீகமாக விமர்சனம் செய்வது நல்லது.

No comments:

Post a Comment