Monday, January 31, 2022

புலிகள் இருந்தவரை

புலிகள் இருந்தவரை புலிகள் மீதான விமர்சனம் என்பது மாற்றுக்கருத்து என்ற அரசியல் தன்மை கொண்டதாக இருந்தது. ஆனால் இன்று புலிகள் இல்லாத நிலையில் புலிகள் மீதான விமர்சனம் என்பது இலங்கை இந்திய அரசுக்கு உதவுவதாகவே இருக்கின்றது. தொடரும் தமிழ்த்தேசிய போராட்டத்தில் பங்கு பற்றாமல் இருக்கவும் தங்களை பிரமுகராக காட்டுவதற்கும் சிலர் புலி எதிர்ப்பு பிரச்சாரம் கிளப்கவுசில் செய்கின்றனர். இவர்கள் புலிகளை எதிர்க்கவில்லை. புலி எதிர்ப்பு பெயரால் தமிழத்தேசியத்தையும் அதற்கான தமிழ் மக்களின் போராட்டத்தையும் எதிர்க்கிறார்கள்.

No comments:

Post a Comment