Monday, January 31, 2022

எண்ணெய் இல்லாது சப்புகஸ்கந்தையை மூடினார்கள்.

எண்ணெய் இல்லாது சப்புகஸ்கந்தையை மூடினார்கள். மின்சாரத்தை துண்டிக்கமாட்டோம் என்று கூறிக்கொண்டு அங்காங்கு மின்சாரத்தை துண்டித்து வருகிறார்கள். விற்கப்பட்ட வளங்களை மீட்டெடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்குத் தாரைவார்க்கிறார்கள். இவற்றுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்திருந்த வேளையில் அரசு மக்கள் மீது முட்டைகளை வீசி எறிந்துள்ளது. 30 ரூபா விலையான முட்டைகளை மக்கள் மீது அரசால் வீசி எறிய முடியும். ஆனால் மக்கள் நினைத்தால் அரசையே தூக்கி எறிய முடியும். அதை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment