Monday, January 22, 2024

செய்தி - தமிழகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு

செய்தி - தமிழகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் தமிழ் அகதிகளுக்கு இலங்கை அரசு சர்வதேச கடவுச்சீட்டு வழங்குகிறது. இதன் மூலம் தமிழ் நாட்டில் இருக்கும் அகதிகள் இலங்கை திரும்பி வராமல் விரும்பிய வெளிநாட்டிற்கு சட்டரீதியாக செல்லும் வாய்ப்பு எற்பட்டுள்ளது. அதேவேளை இந்தியாவில் தொடர்ந்து வாழ விரும்புவர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும். குறிப்பாக சுமார் முப்பதாயிரம் மலையக தமிழர் அகதிகளாக தமிழ் நாட்டில் இருக்கின்றனர். அவர்களிடம் இலங்கை குடியுரிமை இல்லை. எனவே அவர்கள் இலங்கை திரும்பி வர முடியாது. இலங்கையோ அல்லது வேறு வெளிநாட்டிற்கோ செல்ல விரும்பும் அகதிகளுக்கான அனுமதியை உடன் வழங்க வேண்டும். எக்ஸிட் பெர்மிட்டிற்கு அறவிடும் லட்சக்கணக்காகன பணத்தை நிறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment