Monday, January 22, 2024

இருவரும் பெண்கள்

இருவரும் பெண்கள் இருவரும் ஈழத் தமிழர்கள் ஒருவர் இந்திய தொலைக்காட்சி நடத்திய பாட்டுப்போட்டியில் பங்குபற்றி பரிசு பெற்றவர். இன்னொருவர் இந்தோனிசியாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி பதக்கம் பெற்றவர். இருவரும் சாதனையாளர்கள்தான். ஆனால் பாட்டுப் போட்டியில் பெற்ற பரிசைவிட வயதானவர்களுக்கான ஓட்டப்போட்டியில் நாட்டுக்காக பெற்ற பதக்கம் மதிப்பு மிக்கது. ஆனால் ஜனாதிபதியோ பாட்டுப்போட்டியில் பரிசு பெற்றவரை பாராட்டியதுபோன்று நாட்டுக்காக ஓட்டப்போட்டியில் பதக்கம் பெற்றவரை பாராட்டவில்லை. ஏனெனில் இதுதான் மீடியா பவர். ஒருவேளை ஓட்டப்போட்டியில் பதக்கம் பெற்றவர் மீடியாக்களால் புகழப்பட்டிருந்தால் ஜனாதிபதி அவருடன் சேர்ந்து போட்டோ பிடித்திருப்பாரோ?

No comments:

Post a Comment