Tuesday, January 30, 2024

இனியாவது இந்திய மத்திய மாநில அரசுகள்

•இனியாவது இந்திய மத்திய மாநில அரசுகள் இரங்குமா? சாந்தன் இலங்கை பிரஜை என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டியிருப்பதால் சாந்தனை அனுப்ப முடியவில்லை என இந்திய அரசு கூறிவருகின்றது. சாந்தன் ஒரு இலங்கை பிரஜை என்று இந்திய அரசு குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது. அதை ஏற்று நீதிமன்றமும் அவருக்கு தண்டனை வழங்கியது. அவர் 33 வருடம் தண்டனை அனுபவித்து வெளிவந்த பின்பு இப்போது அவர் இலங்கை பிரஜை என்று இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய அரசு கூறுகின்றது. அவரிடம் இலங்கை கடவுச்சீட்டு உள்ளது. அவர் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு இது போதுமானது. இப்போது இலங்கை வெளிவிகார அமைச்சர் சாந்தன் நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை தூதரகம் எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசுகூட இரங்கியுள்ளது. இனியாவது இந்திய அரசு இரங்குமா? அல்லது ஏதும் சாக்குகள்கூறி தொடர்ந்தும் அடைத்து வைத்திருக்கப் போகின்றார்களா?

No comments:

Post a Comment