Monday, January 22, 2024

சிலர், இவர்கள் இந்தியாவில் இருப்பதால்

சிலர், இவர்கள் இந்தியாவில் இருப்பதால் வேறு வழியின்றி இந்திய அரசு விசுவாசிகளாக இருப்பதாக கூறுகின்றனர். இன்னும் சிலர், இவர்கள் எப்போதும் இந்திய அரசு விசுவாசிகள். அதனால்தான் இந்தியாவில் இருக்கின்றனர் என்கிறார்கள். இதில் எது உண்மை என்பது இனி தெரிந்துவிடும். ஏனெனில் தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர் இலங்கை வராமலே சர்வதேச கடவுச்சீட்டு இப்போது பெறமுடியும். அதனால் இந்தியாவில் இருந்து விரும்பிய வெளிநாட்டிற்கு சட்டரீதியாக செல்ல முடியும். குறிப்பாக இந்தியாவில் தான் மிகவும் கஸ்ட நிலையில் இருப்பதாக கூறும் காசி அனந்தன் அவர்கள் இனி லண்டனில் மருத்துவராக இருக்கும் தன் மகளுடனோ அல்லது அவுஸ்ரேலியாவில் மருத்துவராக இருக்கும் இன்னொரு மகளுடனோ சேர்ந்து வாழ முடியும்.

No comments:

Post a Comment