Tuesday, January 30, 2024

தமிழர்களின் மனித உரிமைகளுக்கு

தமிழர்களின் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கனடா தடை விதித்துள்ளது. இந்த செயற்பாடுகள் தொடரும். தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும்" என பிரதமர் ட்ரூடோ உறுதியளித்துள்ளார். கனடாவில் மூன்று லட்சம் தமிழர்களே உள்ளனர். ஆனாலும் கனடா தொடர்ந்தும் தமிழ் சமூகத்துடன் பயணிக்கும் என்று பிரதமர் கூறுகின்றார். இந்தியாவில் எட்டுகோடி தமிழர்கள் இருக்கின்றனர். ஆனால் இனப்படுகொலை புரிந்த ராணுவ தளபதிகளை அழைத்து செங்கம்பள வரவேற்பு கொடுக்கிறது இந்திய அரசு. அதுமட்டுமல்ல இதுவரை தீர்வு பெற்று தருவதாக உறுதியளித்து வந்த இந்திய அரசு இப்போது தன்னால் வலியுறுத்த மட்டுமே முடியும் என்று கைவிரித்துள்ளது. இந்திய அரசு ஈழத் தமிழர்களை மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள எட்டுக்கோடித் தமிழர்களைக்கூட ஒருபொருட்டாக மதிக்கவில்லை.

No comments:

Post a Comment