Tuesday, January 30, 2024

மகிந்த ராஜபக்சாவின் வலது கரமாக

மகிந்த ராஜபக்சாவின் வலது கரமாக விளங்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். பொதுவாக யாரும் இறந்தால் மக்கள் கவலைப்படுவார்கள். கவலைப்படவில்லை என்றாலும் ஒருபோதும் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். ஆனால் இந்த அமைச்சரின் மரணத்திற்கு சிங்கள மக்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் எந்த வீதியில் எந்த வாகனத்தில் ஒரு ஏழை வயோதிபரை மோதி கொன்றுவிட்டு தன் அதிகார செல்வாக்கால் தப்பினாரோ அதே வீதியில் அந்த வாகனத்தில் மோதி இறந்துள்ளார். இப்போது அரசு வேறு வழியின்றி சமூக வலைத்தளங்களில் இப்படி மகிழ்ச்சி தெரிவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டுகிறது. என்னே கேவலம் இது?

No comments:

Post a Comment