Tuesday, January 30, 2024

அன்று பார்வதி அம்மாள் சிகிச்சை

அன்று பார்வதி அம்மாள் சிகிச்சை பெற வந்தபோது வயதானவர் என்றுகூட பார்க்காமல் இரக்கமின்றி திருப்பி அனுப்பியது கலைஞர் அரசு. இன்று கலைஞர் மகன் ஸ்டாலின் அரசு சாந்தனின் தாயாருக்கு இரங்க மறுக்கிறது. இறப்பதற்கு முன் தன் மகன் சாந்தனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று 33 வருடங்களாக காத்து இருக்கிறார் அத் தாய். சாந்தன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாந்தன் மரணமடைந்தால் அவர் உடலையாவது தாயாரிடம் அனுப்பி வைக்குமா தமிழக அரசு? திமுக அரசு இரங்க மறுப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் கூட்டணியில் இருக்கும் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் போன்றவர்கள்கூடவா இரங்க மறுக்கின்றனர்?

No comments:

Post a Comment