Monday, January 22, 2024

•தமிழக மீனவர்களுக்கு ஒரு ஈழத் தமிழ் மீனவனின் கண்ணீர் வேண்டுகோள்.

•தமிழக மீனவர்களுக்கு ஒரு ஈழத் தமிழ் மீனவனின் கண்ணீர் வேண்டுகோள். ஒருபுறம் இந்திய தமிழ் மீனவர்கள் சிங்கள கடற்படை தம்மை தாக்குவதாக கூறுகின்றனர். மறுபுறம் எல்லை தாண்டிவரும் இந்திய ரோலர் படகுகள் தம் வலைகளை அறுத்து நாசம் செய்வதாக ஈழத் தமிழ் மீனவர்கள் கூறுகின்றனர். இலங்கை இந்திய அரசுகள் இப் பிரச்சனையை தீர்க்காமல் வேண்டுமென்றே ஈழ , தமிழக மீனவர்களிடையே மோதலை உருவாக்கி வருகின்றன. இப் பிரச்சனை தீர ஓரே வழி ஈழத் தமிழ் மீனவர்களும் தமிழக மீனவர்களும் நேரடியாக பேச வேண்டும். இதற்கு இலங்கை அரசும் இந்திய அரசும் வழி வகுக்க வேண்டும். மீனவர் பிரச்சனை தீர கச்சதீவை மீட்க வேண்டும் என பேசும் தமிழக தலைவர்கள் முதலில் இப் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment