Monday, January 22, 2024

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள்

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் செல்லத்துரை கிருபாகரன் மற்றும் நாகலிங்கம் மதனசேகரம் ஆகிய இருவரும் சிங்கள அரசால் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், பயஸ்,ஜெயக்குமார் ஆகியோர் தமிழக அரசால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கள அரசுக்கு இருக்கும் இரக்கம் கூட தமிழக அரசுக்கு இல்லையா? தமிழக அரசு நடத்தும் அயலக தமிழர் தின விழாவில் பங்கு பற்றும் ஈழத் தமிழ் தலைவர்கள் இந்த சிறப்புமுகாம் அகதிகளின் விடுதலைக்கு தமிழக முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும். இறப்பதற்கு முன் தன் மகன் சாந்தனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று காத்திருக்கும் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

No comments:

Post a Comment