Monday, January 22, 2024

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில்,

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் 11,12 ஆம் திகதிகளில் அயலக தமிழர் விழா நடைபெறுகிறது. இவ் விழாவில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து ஆளுநர் செந்தில் தொண்டமான், மனோகணேசன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சென்னை நோக்கி பயணமாகியுள்ளனர். இதேவேளை, கனடாவின் ஒன்றாரியோ மாகாண உறுப்பினருமான லோகன் கணபதியும் குறித்த நிகழ்வில் பங்பேற்பதற்காக வருகை தந்துள்ளதாக அறிய வருகிறது. இவர்கள் தமிழகத்தில் 40 வருடமாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை கிடைக்க குரல் கொடுக்காவிட்டாலும் குறைந்த பட்சம் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு குரல் கொடுக்க வேண்டும். செல்வம் அடைக்கலநாதன் புதுக்கோட்டை சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர். எனவே சிறப்புமுகாம் கொடுமைகள் அவர் நன்கு அறிவார். 33 வருடமாக சிறை வாழ்க்கையை தொடரும் சாந்தன், முருகன், பயஸ், ஜெயக்குமார் போன்றவர்கள் சிறப்புமுகாமில் இருந்து விடுதலைபெற தமிழக முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும். செய்வார்களா?

No comments:

Post a Comment