Monday, January 22, 2024

சிறப்புமுகாம் அகதிகளை தமிழக முதல்வர்

• சிறப்புமுகாம் அகதிகளை தமிழக முதல்வர் விடுதலை செய்ய வேண்டும் - செல்வம் MP கோரிக்கை. தமிழக அரசு நடாத்தும் அயலக தமிழர் மாநாட்டில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரியுள்ளார். ஈழத் தமிழ் தலைவர் ஒருவர் தமிழ்நாட்டில் வைத்து தமிழக முதல்வர் முன்னிலையில் சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரியிருப்பது இதுவே முதல்முறை. செல்வம் அவர்கள் இவ்வாறு கோரியிருப்பது இனி மற்ற ஈழத் தமிழ்த் தலைவர்களும் கோரிக்கை வைப்பதற்கு வழி வகுத்துள்ளது. இது சிறப்புமுகாம் அகதிகளுக்கு விடுதலை பெற வழி வகுக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது.

No comments:

Post a Comment