Tuesday, January 30, 2024

அவர்கள் ராமரை முன்னிறுத்தும்போது

அவர்கள் ராமரை முன்னிறுத்தும்போது நம்மவர் சிலர் ராவணனை முன்னிறுத்துவது தவறு அப்படி முன்னிறுத்தும்போது ராமாயணம் உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். ராமன் கடவுள் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். எப்படி ராவணன் அரக்கன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோல ராமன் கடவுள் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதேவேளை ராவணன் என்பது கட்டுக்கதை என்றும் அவன் சிவ பக்தன் என்பதும் ஆதாரமற்ற கதை என சிங்கள அமைச்சர் கூறுகின்றார். அதுமட்டுமல்ல, ராவணன் வழிபட்ட திருமலை சிவன் ஆலயத்தை இடித்துவிட்டு அதில் புத்த விகாரை கட்ட வேண்டும் என்றும் அந்த அமைச்சர் கூறுகின்றார். வேடிக்கை என்னவெனில் ஒருபுறம் ராமனுக்கு கோயில் கட்டிய இந்திய பிரதமர் மறுபுறம் ராவணன் வழிபட்ட சிவன்கோவிலை இடிக்க வேண்டும் என்றுகூறும் சிங்கள அரசுக்கு உதவுகிறார். இப்போது புரிகிறதா, இந்த அரசியல்வாதிகள் செய்வதெல்லாம் உண்மையான பக்திக்காக அல்ல பதவிக்காக என்பதை..

No comments:

Post a Comment