Monday, January 22, 2024

வழக்கறிஞர் நடேசன் பற்றி தோழர் சண்முகதாசன்

•வழக்கறிஞர் நடேசன் பற்றி தோழர் சண்முகதாசன் இன்றைய சந்ததியினருக்கு வழக்கறிஞர் நடசேனை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது மகன் வழக்கறிஞர் சத்தியேந்திரா பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். வழக்கறிஞர் சத்தியேந்திரா குட்டிமணி போன்றவர்களின் வழக்கில் ஆஜராகி வாதாடியவர். திம்பு பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தவர். இந்திய அரசு அன்டன் பாலசிங்கம், சந்திரகாசன் போன்றவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றியபோது இவரையும் வெளியேற்றியது. இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். தமிழ் நேஷன் (https://tamilnation.org ) இணையதளத்தை நடத்தி வருகிறார். இவரது தந்தையான வழக்கறிஞர் நடேசன் அவர்கள் 21.12.1986 யன்று மரணமடைந்தார். அப்போது தோழர் சண்முகதாசன் அவர்கள் இவர் பற்றிய இரங்கல் உரை ஒன்றை டெய்லி நியூஸ் பத்திரிகையில் எழுதியுள்ளார். தோழர் சண்முகதாசன் அவர்கள் வழக்கறிஞர் நடேசன் குறித்து எழுதிய இரங்கல் உரையை கீழ்வரும் இணைப்பில் படிக்கலாம். ( தமிழாக்கம் - டாக்டர் தம்பிராசா) http://tholarbalan.blogspot.com/2021/01/blog-post_73.html இந்த இரங்கல் உரை மூலம் நடேசன் குறித்தும் அவர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் தோழர் சண்முகதாசனுக்கு செய்த பொருளாதார உதவிகள் குறித்தும் அறிய முடிகிறது.

No comments:

Post a Comment