Tuesday, January 30, 2024

சிறப்புமுகாம் என்பது

சிறப்புமுகாம் என்பது 3(2)E சட்டப்படி ஒரு வெளிநாட்டவரின் நடமாட்டத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தும் முகாம் ஆகும். நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதேயொழிய மற்றும்படி சாதாரண மக்களுக்குரிய அனைத்து உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்கு உண்டு. ஆனால் நடைமுறையில் இச் சிறப்புமுகாம் என்பது சிறையிலும் விடக் கொடிய சித்திரவதை முகாமாகவே இயக்கப்படுகிறது. அதாவது சிறையில் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு வழங்கும் சலுகைகள் , உரிமைகள்கூட இச் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. 1990ல் தனது பதவியைக் காப்பாற்றுவதற்காக இத்தகையை சிறப்புமுகாமை உருவாக்கி அதில் அகதிகளை அடைத்தவர் கலைஞர் கருணாநிதி. இன்று அவரது மகன் ஸ்டாலின் ஆட்சியிலும் இந்த சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் கொடுமைகள் தொடர்கின்றன. இதற்கு ஒரு முடிவு எப்போது ஏற்படும்? குறிப்பு- இச் சிறப்புமுகாம் பற்றி அறிய விரும்புவோர் கீழ் உள்ள இணைப்பில் நான் எழுதிய நூலை வாசிக்கலாம்.

No comments:

Post a Comment