Wednesday, January 31, 2024

சாந்தன் உயிருக்கு அபத்தான

சாந்தன் உயிருக்கு அபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். அவர் தன்னை இலங்கைக்கு அனுப்புமாறு கடந்த 15 மாதங்களாக கோரி வருகிறார். ஆனால் தமிழக அரசு அவரை நாட்டுக்கு அனுப்பாமல் அடைத்து வைத்திருப்பதால் அவரது சிறை வாழ்வு 33 வருடங்களாக தொடர்கிறது. முருகன் லண்டனில் இருக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றார். இதுதொடர்பாக சென்னையில் உள்ள லண்டன் தூதரகத்தில் கடந்த 20ம் திகதி முருகன் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் தமிழக அரசு முருகன் தூதரகம் செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்கவில்லை. இதனால் முருகன் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இந்நிலையில் ராபர்ட் பயஸ் தம்மை விடுதலை செய்யுங்கள். அல்லது சிறப்புமுகாமில் சிறிது நடைப்பயிற்சி செய்யவாவது அனுமதியுங்கள் என்று கேட்டு உண்ணாவிரதம் இருக்கின்றார். இந்த சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எப்போது முடிவு வரும்?

No comments:

Post a Comment