Monday, January 22, 2024

கண்டியில் இந்திய தூதரகம் ஆரம்பிக்கப்பட்டு

கண்டியில் இந்திய தூதரகம் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடம் நிறைவையொட்டி தூதர் ஆதிரா பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளார். இலங்கையில் கொழும்பு, கண்டி யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை என நாலு இடங்களில் இந்திய தூதரகங்கள் இருக்கின்றன. சிறிய தீவான இலங்கையில் எதற்கு நாலு தூதரகம் என கேட்க வேண்டியவர்கள் நாலு தூதரகம் வைத்து தமிழ் மக்களுக்கு இதுவரை செய்தது என்ன என்று கேட்க வேண்டியவர்கள் பொங்கல் போட்டவுடன் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஓடிப்போய் உட்காந்ந்து சாப்பிடுகின்றனர். இதுகூட பரவாயில்லை , யாழ் இந்திய தூதர் வடையும் பிளேன் டீயடன் எமது தலைவர்களை கைக்குள் வைத்திருக்கிறார். என்று இந்த நிலை மாறும்?

No comments:

Post a Comment