Monday, January 22, 2024

மறப்பது தலைவர்கள் வழமை

•மறப்பது தலைவர்கள் வழமை நினைவூட்ட வேண்டியது எமது கடமை தமிழரசுக்கட்சியின் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன் என சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முருகனின் விடுதலைக்கு சிறீதரன் குரல் கொடுப்பாரா? ஏனெனில் தன் மகன் முருகன் விடுதலைக்கு குரல் கொடுக்கும்படி இதே சிறீதரன் அவர்களிடமும் சம்பந்தர் ஐயாவிடமும் முருகனின் தாயார் நேரில் சென்று கேட்டிருந்தார். ஆனால் சிறீதரனோ அல்லது சம்பந்தர் ஐயாவோ இதுவரை முருகன் விடுதலைக்காக குரல் கொடுக்கவில்லை. சிறீதரன் இரக்கம் காட்டுவாரா? முருகன் 34 வருட சிறைவாழ்வில் இருந்து விடுதலை பெற குரல் கொடுப்பாரா?

No comments:

Post a Comment