Sunday, January 31, 2016

இன்னும் 179 நாட்களில் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு?

இன்னும் 179 நாட்களில் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு?
• சிறையில் உள்ளவர்களின் விடுதலை
• காணாமல் போனவர்கள் பிரச்சனை
• மீள் குடியேற்ற பிரச்சனை
• மீனவர் பிரச்சனை
• இனப் பிரச்சனை
அனைத்து பிரச்சனைகளும் இன்னும் 179 நாட்களில் தீர்க்கப்படும்.
தமிழர் தலைவர் சம்பந்தர் அய்யா தெரிவிப்பு.
சம்பந்தர் அய்யா மட்டுமல்ல அவரது சீடர் சுமந்திரன் அய்யாவும் கூறிவிட்டார்.
சிறையில் உள்ளவர்களையே விடுவிக்க இனவாதிகள் விடுகிறார்கள் இல்லை என்று கூறும் அரசு, இனப்பிரச்சனையை எப்படி தீர்க்கும் என்று இவர்களிடம் கேள்வி கேட்காதீர்கள்.
இப்படி கேள்விகள் கேட்டால் நீங்கள் தமிழர் ஒற்றுமையை குழப்புவதாக சம்பந்தர் அய்யா முத்திரை குத்துவார்.
சொன்னபடி தீர்வு கிடைக்காவிட்டால் சம்பந்தர் அய்யா தனது பதவிகளை ராஜினாமா செய்வாரா என்று கேட்டுவிடாதீர்கள்.
அப்படி கேட்டால் அவரது சீடன் சுமந்திரன் அவர்களுக்கு கோபம் வந்துவிடும்.
தமிழ்மக்களை புத்திசாலிகள் என்கிறார்கள். ஆனால் என்ன தீர்வு வரும்? எப்படி வரும்? என்பதை கேட்கக் கூடாது என்கிறார்கள்.
சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் பதவியை அனுபவிப்பதற்கு
தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடிமைகளாக இருக்க வேண்டுமா?
2016 ம் ஆண்டு இதற்கு விடை தருமா?
ஒருபுறம் பார்த்தால் பதவிகள் பெற துடிக்கிறார்.
மறுபுறம் பார்த்தால் (லிங்கா நகரில்) பணம் சுருட்ட முனைகிறார்.
முழுவதும் பார்த்தால் அவர் ஒரு ஈழத்து கருணாநிதியாக தெரிகிறார்.

No comments:

Post a Comment