Sunday, January 31, 2016

•திவாலாகும் தமிழ்நாடு? கலைஞர் சொன்னதும், சொல்லாமல் மறைத்ததும்!

•திவாலாகும் தமிழ்நாடு?
கலைஞர் சொன்னதும், சொல்லாமல் மறைத்ததும்!
தமிழக அரசின் இன்றைய மொத்த கடன் 2லட்சத்து 11 ஆயிரத்து483 கோடி ரூபா ஆகும்.
அதாவது தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் 28 ஆயிரத்து 778 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தமிழகம் திவாலாகிறது என்று கலைஞர் கூறியுள்ளார்.
கலைஞர் சொன்னது உண்மைதான். ஆனால் அதேவேளை சில விடயங்களை கலைஞர் சொல்லாமல் மறைத்துள்ளார்.
இந்த தமிழக அரசின் கடனுக்கு ஜெயா அம்மையார் மட்டும் காரணம் அல்ல. மாறி மாறி ஆட்சி புரிந்த தானும் காரணம் என்பதை கலைஞர் சொல்லாமல் மறைத்துவிட்டார்.
வெள்ள நிவாரணம் ஜெயா அம்மையார் கேட்டது 5 ஆயிரம் கோடி ரூபா. ஆனால் மோடி அரசு கொடுத்திருப்பதோ 1940 கோடி ரூபா மட்டுமே.
ஒவ்வொரு வருடமும் இந்திய அரசு தமிழகத்தில் இருந்து வசூலிக்கும் வரி 85 ஆயிரம் கோடி ரூபா.
தமிழகம் தனது கடனுக்காக கட்டும் வட்டியின் தொகை 10754 கோடி ரூபா.
தமிழகம் திவாலாகிறது. ஆனால் ,
இந்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்தது 10 ஆயிரம் கோடி ரூபா.
இந்திய அரசு நேபாளத்திற்கு கொடுத்தது 14 ஆயிரம் கோடி ரூபா
இந்திய அரசு பூட்டானுக்கு கொடுத்தது 8 ஆயிரம் கோடி ரூபா
இந்திய அரசு மங்கோலியாவுக்க கொடுத்தது 6 ஆயிரம் கோடி ரூபா
இந்திய அரசு ஆப்கானிஸ்தானுக்கு கொடுத்தது 1 ரில்லியன் டொலர்.
இது பற்றி ஏன் கலைஞர் சொல்வதில்லை?
ஏன் சொல்லாமல் மறைத்துள்ளார்?

No comments:

Post a Comment