Sunday, January 31, 2016

சம்பந்தர் அய்யாவுக்கு விருது கொடுத்தவர்கள் இந்த சிறுவனை கொஞ்சம் நினைத்து பார்ப்பார்களா?

சம்பந்தர் அய்யாவுக்கு விருது கொடுத்தவர்கள்
இந்த சிறுவனை கொஞ்சம் நினைத்து பார்ப்பார்களா?
இந்த சிறுவன் பெயர் செந்தூரன்.
பாடசாலையில் படித்த சிறுவன்.
கைதிகளை விடுதலை செய்யுமாறு தன் உயிரைக் கொடுத்தவன்.
கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியவன்
தன் உயிரை அர்ப்பணித்து கைதிகள் விடுதலைக்கு குரல் கொடுத்தவன்.
இவன் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை.
இவன் எதிர்க்கட்சி தலைவர் இல்லை.
இவன் திருமலை மாவட்ட இணைத் தலைவர் இல்லை.
இவன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இல்லை.
இருந்தாலும் இவன் தமிழ் அரசியல் கைதிகளுக்காக
தன் உயிரையே கொடுத்தான்.
இவனுக்கு
இதுவரை யாரும் விருது கொடுக்கவில்லை.
இவனது அர்ப்பணிப்பு போற்றப்படவில்லை
மிகவும் வறிய குடும்பம் இவனுடையது.
இவனுக்கு இழப்பீடு வழங்காவிட்டாலும் பரவாயில்லை
இவனது குடும்பத்திற்கு யாரும் ஆறுதல்கூட தெரிவிக்கவில்லை
எதுவுமே செய்யாத சம்பந்தர் அய்யாவுக்கு விருது கொடுப்பவர்கள்
இந்த சிறுவனுக்கு விருது கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை
விருது வாங்க வந்த சுமந்திரனுக்கு கொடுத்த டிக்கட் பணத்தையாவது
இந்த சிறுவன் குடும்பத்திற்கு கொடுங்களேன். பிளீஸ்
இனியாவது இதனை கவனிப்பார்களா?

No comments:

Post a Comment