Sunday, January 31, 2016

•நாய்களை கட்டிப் போடுங்கள்!

•நாய்களை கட்டிப் போடுங்கள்!
"நான் நாய்களை கட்டிப் போட்டேன். ஆனால் எனக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர்கள் அதை அவிழ்த்து விட்டார்கள்" என்று பிக்குகள் பற்றி சேர்.ஜோன் கொத்தலாவ கூறினாராம்.
அவர் அவ்வாறு கூறியது உண்மையோ இல்லையோ தெரியாது. ஆனால் அந்த நாய்கள் கட்டிப் போடாவிட்டால் நாட்டையே சீரழித்தவிடும் என்பது மட்டும் இப்போது நன்றாக புரிகிறது.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். ஆனால் பிக்குகள் அதற்கு அப்பாற்பட்டவர்கள் போன்று சில பிக்குகள் நடக்க முனைகின்றனர்.
மகிந்த ராஜபக்ச குடும்பம் சட்டத்தின் பிடியில் சிக்குவதில் இருந்து தப்புவதற்காக பொதுபலசேனா என்ற பிக்குகள் கூட்டத்தை தூண்டிவிடுகின்றார்கள்.
மகிந்த ராஜபக்ச குடும்பத்தையும் அவரால் தூண்டப்படும் பிக்குகளையும் தூக்கி சிறையில் அடைக்க வேண்டும். இதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
இந்த வெறிபிடித்த பிக்குகளை சிங்கள மக்கள் அனைவரும் ஆதரிக்கின்றார்கள் என்று நினைப்பது தவறு. இவர்களால் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெறமுடியவில்லை என்பதே அதற்கு சான்று.
அதுமட்டுமல்ல பல சிங்கள அமைப்புகள் இந்த பிக்குகளுக்கு எதிராக ஊடகங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களின் உண்மை முகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துகின்றார்கள்.
அரசும்கூட மறைமுகமாக இந்த பிக்குகளுக்கு ஆதரவு வழங்குகின்றதோ என்ற சந்தேகம் வருகிறது.
ஏனெனில் தமது ஆட்சிக்கு அபத்து என்றவுடன் 60 அயிரம் சிங்கள இளைஞர்களை கொன்று அடக்கியவர்கள் இந்த பிக்ககளை அடக்க ஏன் தயங்குகிறார்கள்?
நீர்கொழும்பில் குடிநிரில் நஞ்சைக் கலந்த இந்திய கம்பனிக்கு எதிராக போராடிய சிங்கள மக்களை இராணுவம் கொண்டு சுட்டு அடக்கியவர்கள் ஏன் இந்த பிக்குகளை அடக்க தயங்குகிறார்கள்?
ஜேஆர் ஜெயவர்த்தனா எப்படி சிறில்மத்தியூ போன்றவர்கள் தூண்டிய இனவாதத்தில் குளிர் காய்ந்தாரோ அதேபோல் அவரது மருமகனான ரணில் அவர்களும் பிக்குகள் தூண்டும் இனவாதத்தில் குளிர்காய முனைகிறார்.
பிக்குகளுக்கு வழங்கப்படும் சகல சலுகைகளையும் நீக்கி அவர்கள் தவறு செய்யும் போது தயங்காமல் சிறையில் அடைக்க வேண்டும். இல்லையேல் மக்களால் தூக்கியெறியப்படப்போவது பிக்குகள் மட்டுமல்ல ரணில் அரசும்தான் என்பதை வரலாறு காட்டும்.
ரணில் அவர்களே!
நாய்களை கட்டிப் போடுங்கள்.
விசர் நாய்களை சுட்டு பொசுக்குங்கள்.

No comments:

Post a Comment