Sunday, January 31, 2016

ஒரு கொலை இரண்டு பார்வைகள் !!

•ஒரு கொலை
இரண்டு பார்வைகள் !!
2009 ம் ஆண்டு புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கோத்தபாயாவின் உத்தரவின் பேரில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டான்.
இன்று நிராயுதபாணியான பாலஸ்தீன சிறுவன் ஒருவன் இஸ்ரேலிய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான்.
இரண்டு கொலையும் ஒன்றுதான். சிறுவர்களைக் கொன்ற இந்த காட்டுமிராண்டித்தனம் கண்டிக்கப்பட வேண்டியதுதான்.
ஆனால் சிறுவன் பாலச்சந்திரன் கொலை மறக்கப்பட்டுவிட்டது. பாலஸ்தீன சிறுவன் கொலை உலகம் பூராவும் கண்டிக்கப்படுகிறது.
ஏனெனில்,
இந்த சிறுவன் பிரபாகரனின் மகன். எனவே கொல்லப்படத்தான் வேண்டும் என்று சொல்லும் சுப்பிரமணிய சுவாமிகள் யாரும் பாலஸ்தீனத்தில் இல்லை.
இந்த சிறுவன் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதி . நாம் ஒருபோதும் பயங்கரவாதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறும் சம்பந்தர் அய்யாக்கள் யாரும் பாலஸ்தீனத்தில் இல்லை.
சிறுவனைச் சுட்டது வெறும் போர்க்குற்றம்தான். இனப் படுகொலை அல்ல என்று வக்காலத்து வாங்கும் சுமந்திரன்கள யாரும் பாலஸ்தீனத்தில் இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக சுட்டவர்கள் நல்லாட்சி செய்கிறார்கள் என்று சேர்டிபிக்கேட் கொடுக்கும் தமிழ்தேசியகூட்டமைப்பு பாலஸ்தீனத்தில் இல்லை.
அதனால்தான் பாலச்சந்திரன் கொலை மறக்கப்பட்டுவிட்டது.
பாலஸதீனிய சிறவன் கொலை உலகம் பூராவும் கண்டிக்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி நான் அறிந்தவரையில்,
உலக பாலஸ்தீன தலைவர்" கருணாநிதி அவர்களுக்கு இல்லை
"
"பாலஸ்தீன தாய்" ஜெயா அம்மையார் அவர்களுக்கு இல்லை.
இவர்கள் யாரும் இல்லாதபடியால்தான் அவர்களால் சாதிக்க முடிகிறது.
இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்வோமா?

No comments:

Post a Comment