Sunday, January 31, 2016

இந்தியாவில் "பசு மாதா" இலங்கையில் "சிங்க லே"

•இந்தியாவில் "பசு மாதா"
இலங்கையில் "சிங்க லே"
இந்தியர்களின் தாய் "பசு மாடு" என்று இந்துமத வெறியர்கள் பரப்புகிறார்கள்.
இலங்கையில் அனைவரும் "சிங்க ரத்தம்" என்று இனவெறியர்கள் பரப்புகிறார்கள்.
ஆட்சியை பிடிப்பதற்காகவும் பிடித்த அட்சியை தக்க வைப்பதற்காகவும் அப்பாவி மக்களை இனரீதியா மதரீதியாக பிரிப்பதற்கு வெறியை பரப்புகிறார்கள்.
ஆட்சியில் ஏறியதும் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வாரு இந்தியருக்கும் 13 லட்சம் ருபா தருவேன் என்றார் மோடி. ஆனால் இதவரை ஒரு சதம் கூட தரப்படவில்லை.
மக்கள் தமது அரசுக்கு எதிராக ஒன்றுபட்டு திரண்டுவிடக்கூடாது என்பதற்காக மதவெறியை மோடி அரசு பரப்புகிறது.
அதேபோல் இலங்கையில் ஆட்சியை இழந்த மகிந்த கும்பல்கள் தம்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தடுப்பதற்கும், ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கும் சிங்கள இனவெறியை தூண்டுகின்றன.
சிங்க லே என்ற அச்சிட்ட போஸ்டர்கள் முஸ்லிம்கள் வீடுகள் மீது வேண்டுமென்றே ஒட்டப்படுகின்றன. சிங்க லே அச்சிடப்பட்ட ரீ சேர்ட்டுகள் 3500 ரூபாவிற்கு விற்கப்படுகின்றன.
இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய இலங்கை அரசு வேண்டுமென்றே மௌனம் சாதிக்கிறது.
ஏனெனில் ஆட்சியை பிடித்து ஒரு வருடமாகியும் மக்களுக்கு எதுவும் செய்யாத செயல் திறனற்ற அரசாக இருப்பதால் மக்கள் கவனத்தை திருப்ப இலங்கை அரசு இதரனை பயன்படுத்துகிறது.
இலங்கை நாடு பூராவும் இயற்கைவளங்கள் யாவும் இந்தியாவிற்கு விற்கப்பட்டுள்ளது. இது குறித்து எந்த சிஙக லே தலைவர்களுக்கும் கவலை இல்லை.
தமிழ் மக்களின் சயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்களுடன் ஜக்கியப்பட்டு போராடுவதன் மூலமே இலங்கையை காப்பாற்ற முடியும். இல்லையேல் முழு இலங்கையும் விரைவில் இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறிவிடும்.

No comments:

Post a Comment