Sunday, January 31, 2016

நடிகர் சஞ்சய்தத் விடுதலை சொல்லும் சேதி என்ன?

•நடிகர் சஞ்சய்தத் விடுதலை சொல்லும் சேதி என்ன?
செய்தி- நடிகர் சஞ்சய்தத் பெப்-27 விடுதலை செய்யப்படவுள்ளார்.
சாட்டப்பட்ட குற்றம்:
நடிகர் சஞ்யத் ஏ.கே 47 துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பேரறிவாளன் பற்றரி வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
தண்டனை:
ஏ.கே 47 ஆயுதம் வைத்திருந்த சஞ்சய்தத்ற்கு 5 வருடம் தண்டனை விதிக்கப்பட்டது.
பற்றரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சலுகை:
சஞ்சய்தத் பல முறை பரோலில் வந்து வீட்டில் தங்க அனுமதிக்கப்பட்டது.
பேரறிவாளனுக்கு ஒருமுறைகூட பரோலில் வர அனுமதிக்கப்படவில்லை.
தண்டனை அனுபவித்த காலம்:
சஞ்சய்தத் இதுவரை 18 மாதமே தண்டனை அனுபவித்துள்ளார்
பேரறிவாளன் 25 வருடங்கள் தண்டனை அனுபவித்துள்ளார்.
விடுதலை:
சஞ்சய்தத் எதிர்வரும் பிப் -27ம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளார்.
பேரறிவாளனை பொங்கலுக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு தாயார் கோரியுள்ளார்.
நியாயம்:
இந்தியா ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் அதே இந்தியாவில் சஞ்சயதத்திற்கு ஒரு நியாயமும் பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயமும் வழங்கப்படுகிறது.
உள்ளவனுக்கு ஒரு நியாயம்.
இல்லாதவனுக்கு இன்னொரு நியாயம்.
இததான் இந்திய நியாயமா?
இதுதானா சஞ்சயதத் விடுதலை சொல்லும் சேதி?

No comments:

Post a Comment