Sunday, January 31, 2016

•புத்தாண்டு பிறக்கிறது. ஜெயா அம்மையாரின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் பொங்கியெழ அரம்பித்துவிட்டார்கள்.

•புத்தாண்டு பிறக்கிறது.
ஜெயா அம்மையாரின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக
மக்கள் பொங்கியெழ அரம்பித்துவிட்டார்கள்.
வெள்ள அனர்த்தத்தில் இருந்து மக்கள் விடுபடவில்லை
வெள்ள நிவாரணம்கூட இன்னும் வழங்கப்படவில்லை
இந்த நிலையில் ஜெயா அம்மையாருக்கு 400 கட்அவுட்கள் ஆத்திரம் கொண்ட மக்கள் கட்அவுட்டை கிழித்தெறிப்பு
தமிழக மக்களின் உலகிற்கான புத்தாண்டு செய்தி இது.
பொங்கி எழும் மக்கள் போராட்டத்தை வாழ்த்தி வரவேற்போம்.
கட்அவுட்டை கிழித்த மூவர் சிறையில் அடைப்பு
ஜெயா அம்மையாரின் ஏவல் நாயாக பொலிஸ் செயற்படுகிறது.
மதுவுக்கு எதிராக பாட்டு பாடிய கோவன் சிறையில் அடைப்பு
யட்டி ஸ்டிக்கர் வரைந்தார் என்று வியாபாரி சிறையில் அடைப்பு
முகநூலில் எழுதினார் என்று ஊட்டி வழக்கறிஞர் சிறையில் அடைப்பு
ஜெயா அம்மையாருக்கு எதிராக வாய் திறந்தால் உடனே சிறையில் அடைப்பு
ஜெயா அம்மையாரின் சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட
தமிழக மக்கள தீர்மானித்துவிட்டார்கள்.
இன்னும் 4 மாதத்தில் தேர்தல் வரவுள்ளது.
ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பதைவிட
யார் மீண்டும் வரக்கூடாது என்பதே முக்கியமாக உள்ளது.
ஜெயா அம்மையாரை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும.
அத்துடன் அவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்.
ஜெயா அம்மையார் திருந்தவில்லை. அவர் ஒருபோதும் திருந்தப்போவதில்லை.
ஜெயா அம்மையாருக்கு எற்படும் தோல்வி சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
மக்கள் சக்தியே மகத்தான சக்தி. அது அணுகுண்டை விட வலிமையானது.
மலரும் 2016 ம் ஆண்டு இதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும்.

No comments:

Post a Comment