Sunday, January 31, 2016

•வடலி வளர்த்து கள்ளு குடிக்கலாம்!

•வடலி வளர்த்து கள்ளு குடிக்கலாம்!
ஸ்காட்லாந்து சமஸ்டி முறையை ஆராய்வதற்காக சம்பந்தர் அய்யா லண்டன் வந்துள்ளாராம்.
ஒரு வருடத்திற்குள் தீர்வு என்றார். அப்புறம் பார்த்தால் இப்பதான் ஆராயப்போறாராம்.
இவர் எப்ப ஆராய்ந்து? எப்ப தீர்வை முன்வைக்கிறது?
ஊரில "வடலி வளர்த்து கள்ளு குடிக்கிறது" நடந்தாலும்கூட சம்பந்தர் அய்யா தீர்வு பெற்று தருவது மட்டு:ம் நடக்காது போல கிடக்கு.
பரவாயில்லை. இப்பதான் புரியுது. கனடாக்காரர்கள் ஏன் இவருக்கு "வாழ்நாள் வீரர்" விருது கொடுத்தவர்கள் என்று.
நல்ல வேளை தீர்வு பிரச்சனை என்றபடியால் ஸ்காட்லாந்து முறையை பார்க்க வந்துள்ளார்.
ஒருவேளை இது சாவுப் பிரச்சணை என்றால் செத்து பார்த்துதான் சொல்லுவன் என்று சம்பந்தர் அய்யா அடம்பிடித்தால் என்ன செய்வது?
சரி அய்யா, ஆராய்கிறது என்று வெளிக்கிட்டுவிட்டியள். கையோட சுவிஸ்ற்கும்போய் அங்கேயுள்ள கண்ரோன் பிரதேச சுயாட்சியையும் ஒருக்கால் பாருங்கோ!
ஆனால் உண்மையில் நீங்கள் சாணக்கியர்தான் அய்யா. முதல்முறையாய் இதை நான் ஒத்துக்கொள்கிறேன்.
நான் அறிந்தவரையில் உலகில் எந்த ஒரு தலைவனும் தன் இனத்தை இந்தளவு ஏமாற்றியதில்லை அய்யா.
தமிழ் இனம் தன்னைத்தானே புத்திசாலி என்று பறைசாற்றிக்கொள்ளும் ஒரு முட்டாள் இனம் என்றெ நினைத்தேன்.
அனால் இன்றுதான் தெரிகிறது அது முட்டாள் இனம் அல்ல அடிமுட்டாள் இனம் என்று.
வளர்க சம்பந்தர் அய்யா புகழ்!
ஒங்குக சம்பந்தர்அய்யா நாமம்!!

No comments:

Post a Comment