Sunday, January 31, 2016

மாடுகளா? மனிதர்களா? யார் மதிப்பு மிக்கவர்கள்?

மாடுகளா? மனிதர்களா?
யார் மதிப்பு மிக்கவர்கள்?
மாடுகள் மீது இரக்கம் காட்டுபவர்கள்
மனிதர்கள் மீது இரக்கம் காட்டவில்லையே!
செய்தி- மாடுகள் மீது இரக்கம் கொண்டதாக கூறப்படும் விலங்குகள் நல வாரியம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜல்லிக்கட்டிற்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மிருகங்களை வைத்து சர்க்கஸ் நடத்தக்கூடாது என சட்டமியற்றியுள்ள இந்திய அரசு சிறுவர்களை வைத்து சர்கஸ் நடத்தவதை ஏன் கண்டுகொள்வதில்லை?
சிறுவர்களை வைத்து சர்க்கஸ் நடத்தப்படுகிறது.
சிறுவர்களை வைத்து வேலை வாங்கப்படுகிறது.
விலங்குகளை வதைக்ககூடாது என அக்கறை கொள்ளும் விலங்குகள் நல வாரியம் சிறுவர் வதை குறித்து அக்கறை கொள்வதில்லை?
சிறுவர்கள் மாடுகளை விட கேவலமானவர்களா? அல்லது
மாடுகள் சிறுவர்களை விட மதிப்பு மிக்கவையா?
சிறுவர்களிடம் வேலை வாங்கக்கூடாது என சட்டம் உள்ளது. ஆனால் நாடு பூராவும் சிறுவர்கள் வேலை வாங்கப்படுகின்றனர்.
இது அரசின் கண்களுக்கு தெரிவதில்லையா? அல்லது
இது விலங்குகள் நலவாரியத்திற்கு அக்கறை இல்லையா?
பீட்டா என்று ஒரு அமெரிக்க பணத்தில் இயங்கும் நிறுவனம். இது மிருகவதைக்கு எதிராக பெரிதாக கூச்சல் போடுகிறது.
சிரியாவில் அமெரிக்க கொடுமையால் மக்கள் உணவின்றி நாய்களையும் பூனைகளையும் பிடித்து உண்கிறார்கள்.
இது குறித்து இந்த பீட்டா ஏன் வாய் திறப்பதில்லை?
மக்களே!
இந்த போலி மிருக நல வாரியங்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.
முதலில் மனிதர்களை மதிப்போம்.
அப்புறம் மாடுகளை மதிப்போம்.

No comments:

Post a Comment