Sunday, January 31, 2016

•இந்திய அரசு பாகிஸ்தான் பாடகருக்கு குடியுரிமை வழங்குகிறது ஈழத் தமிழ் அகதிகளை சிறப்புமுகாமில் அடைக்கிறது!

•இந்திய அரசு
பாகிஸ்தான் பாடகருக்கு குடியுரிமை வழங்குகிறது
ஈழத் தமிழ் அகதிகளை சிறப்புமுகாமில் அடைக்கிறது!
பாக்கிஸ்தான் பாடகர் அத்னான் சாமிக்கு கடந்தவாரம் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதேவேளை கடந்த 33 வருடங்களாக தமிழகத்தில் வாழ்ந்துவரும் ஈழ அகதிகளுக்கு இன்னும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை.
பொதுவாக ஒரு நாட்டில் 7 வருடங்கள் வாழ்ந்தாலோ அல்லது அந்த நாட்டில் பிறந்தாலோ அல்லது அந்த நாட்டில் திருமணம் முடித்தாலோ குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்தியாவில் 33 வருடமாக வாழ்ந்து வரும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது.
இந்தியாவில் திருமணம் முடித்த ஈழத் தமிழர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்படுகிறது.
இந்தியாவில் பிறந்த ஈழதமிழ் குழந்தைகளுக்கும்கூட இந்திய குடியுரிமை மறுக்கப்படுகிறது.
அதுமட்டுமலல இந்தியாவில்; ஈழ அகதிகள் மட்டுமே சிறப்புமுகாமில் அடைக்கப்படுகிறார்கள்.
ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாததால் அவர்களால்
• உயர் கல்வி பெற முடியவில்லை
• நல்ல வேலைவாய்ப்புகள் பெற முடியவில்லை
• டிறைவிங் லைசென்ஸ் எடுக்க முடியவில்லை
• கடவுச்சுPட்டு எடுக்க முடியவில்லை
• இலங்கையில் உள்ள உறவினர்களை சென்று பார்வையிட முடியவில்லை
• வெளிநாடுகளுக்கு செல்ல முடியவில்லை
தமிழகத்தில்தான் "ஈழத்தாய்" ஜெயா அம்மையார் ஆட்சி புரிகிறார்.
தமிழகத்தில்தான் "உலகதமிழினத்தலைவர்" கலைஞர் கருணாநிதி இருக்கிறார்.
தமிழகத்தில்தான் "புரட்சி புயல்" வைகோ இருக்கிறார்
தமிழகத்தில்தான் "நாம் தமிழர் சீமான்" இருக்கிறார்
தமிழ் மக்களுக்காக அயராது பாடுபடுவதாக கூறும் இந்த தலைவர்கள் வாழும் தமிழக மண்ணில்தான் ஈழ தமிழ் அகதிகளுக்கு இந்த அவல நிலை காணப்படுகிறது.
இனி ஈழத் தமிழ் அகதிகளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா?

No comments:

Post a Comment