Sunday, January 31, 2016

செய்தி- இலங்கை தமிழர்களை இந்தியா தனது மனதிலும் ரத்தத்திலும் சுமந்திருக்கிறது- யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதர் நடராஜன் பேச்சு

•செய்தி- இலங்கை தமிழர்களை இந்தியா தனது மனதிலும் ரத்தத்திலும் சுமந்திருக்கிறது- யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதர் நடராஜன் பேச்சு
முத்துக்குமார்- இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி தன்னுடல் மீது பெற்றேல் ஊற்றி கொளுத்தி உயிரை விட்ட தமிழ்நாட்டு தமிழன்.
நடராஜன்- யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதர் . இவரும் தன்னை தமிழ்நாட்டு தமிழன் என்கிறார். முன்னர் ஈழத் தமிழர்களை இந்தி படிக்குமாறு கோரியவர். தற்போது ஈழத் தமிழர்களை இந்தியா தன் மனதிலும் ரத்தத்திலும் சுமந்திருக்கிறது என்கிறார்.
தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் எப்படி அடிமையாக நடத்தப்படுகிறார்கள் என்பது இவருக்கு தெரியாதா?
தமிழ்நாட்டில் சிறையைவிடக் கொடிய சிறப்புமுகாமில் அகதிகள் அடைக்கப்பட்டிருபது இவருக்கு தெரியாதா?
எப்படி இவரால் இப்படி கொஞ்சம்கூட கூச்சமின்றி பேச முடிகிறது?
எப்படி தன்னையும் ஒரு தமிழன் என்று இவரால் கூறமுடிகிறது?
யாழ்ப்பாணத்தில் இந்த கொசுவின் தொல்லை தாங்கமுடியல்லைப்பா.
யாராவது இதனை கெதியாய் அடித்து விரட்டுங்களப்பா.

No comments:

Post a Comment