Sunday, January 31, 2016

•தலைவர் சம்பந்தர் அய்யாவால் ஒரு ஆறுதல் வார்த்தை கூறமுடியாதா?

•தலைவர் சம்பந்தர் அய்யாவால்
ஒரு ஆறுதல் வார்த்தை கூறமுடியாதா?
காணாமல் போனவர்களின் உறவுகள்
தங்கள் உறவுகளை தேடித் தரும்படி
பிரிட்டன் பிரதமர் கேமரூனிடம் கேட்டார்கள்
பிரதமர் ரணில் காலைப்பிடித்து கேட்டார்கள்.
ஏன் கொலைகாரண் மகிந்தவிடம் கூட கேட்டார்கள்.
ஆனால் இவர்கள் யாருமே கண்டுபிடித்து கொடுக்காவிட்டாலும்
அவ் உறவுகளை ஒருபோதும் விரட்டி அடிக்கவில்லை.
ஆனால் தமிழ் மக்களின் தலைவர் தலைவர் சம்பந்தர் அய்யாவோ
பொலிசாரைக் கொண்டு அவர்களை விரட்டுகிறாரே!
இது என்ன கொடுமை?
இதற்காகவா தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்?
தமிழ் மக்களின் குறைகளைக்கூட கேட்கமுடியாத நீங்கள் தமிழ் மக்களின் தலைவர்கள் என எந்த முகத்துடன் கூறித்திரிகிறீர்கள்?
உங்களை நேரில் கண்டு தமது குறைகளை கூற வந்த மக்களை பொலிஸ் கொண்டு விரட்டுவதா?
இதுவரை எந்த தலைவரும் செய்யாத திமிர் உங்களுக்கு எப்படி வந்தது?
நீங்கள் காணமால் போனவர்களை கண்டுபிடிக்க முடியாவிடினும் அல்லது
கண்டுபிடிக்க விரும்பாவிடினும் அவர்களது முகத்திற்காக
கொஞ்சம் ஆறதல் வார்த்தையாவது கூறமுடியாதா?

No comments:

Post a Comment