Sunday, January 31, 2016

•"வாழ்நாள் வீரர்" சம்பந்தர் அய்யா வுக்கு சமர்ப்பணம்

•"வாழ்நாள் வீரர்" சம்பந்தர் அய்யா வுக்கு சமர்ப்பணம்
நேற்று- கரைநகரில் கல்லூரி மாணவி கடற்படையால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டாள். அந்த கடற்படை வீரர்களை அடையாளம் காட்டியும்கூட அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய கடற்படை மறுத்து வருகிறது.
இன்று- சம்பூரில் சிறுவன் ஒருவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கிணற்றில் வீசிக் கொல்லப்பட்டிருக்கிறான். இக் கொலையும் சம்பூர் கடற்படை வீரர்களாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை- இதேபோல் இன்னொரு அப்பாவி தமிழன் குழந்தை பாதிக்கப்படலாம். ஆனால் நிச்யமாக சம்பந்தர் அய்யாவின் பிள்ளைகளுக்கு இப்படி நிகழாது. ஏனெனில் அவர்கள் சொகுசாக வாழ்வது இந்தியாவில் அல்லவா!
சம்பந்தர் அய்யாவின் சொந்த மாவட்டத்தில் இக் கொடுமை நிகழ்ந்துள்ளது. ஆனால் "வாழ்நாள் வீரர்" விருது பெற்ற சம்பந்தர் அய்யாவோ இலங்கையில் நல்லாட்சி நடைபெறுவதாக சேட்டிபிக்கேட் கொடுத்து திரிகிறார்.
தமிழன் தன் தலைவிதியை நொந்து கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

No comments:

Post a Comment