Sunday, January 31, 2016

•நம்புங்கள்! இவர்கள் ரோம் பற்றி எரியும்பொது பிடில் வாசித்த மன்னர்கள் அல்லர்.

•நம்புங்கள்!
இவர்கள் ரோம் பற்றி எரியும்பொது பிடில் வாசித்த மன்னர்கள் அல்லர்.
ரயில் சில்லுக்கு காத்தடிக்கும் முட்டாள் தனத்தைக்கூட நம்பலாம்.
ஆனால் இதோ எம் தலைவர்கள் ஸ்கொட்லாந்து சமஸ்டியை லண்டனில் ஆராய்கிறார்கள் என்பதைதான் என்னால் நம்ப முடியவில்லை.
லண்டனில் சொகுசாக இருக்கிறார்கள். தங்கள் சீடர்களை சந்திக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களை சந்திக்க மறுக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் சமஸ்டிக்கட்சி என்றும் தமிழில் தமிழரசுக்கட்சி என்றும் பெயர் வைத்து மக்களை ஏமாற்றியவர்கள்.
கடந்த 60 வருடமாக சமஸ்டிக் கட்சி நடத்தி வருபவர்கள், இப்பதான் சமஸ்டியை ஆராய்கிறார்களாம்.
ஸ்கொட்லாந்து சமஸ்டியை ஆராய லண்டன் வந்தவர்கள் அடுத்து கியூபெக்கை ஆராய கனடா செல்வார்கள்.
அப்புறம் சுவிற்சலாந்து ,தென்னாபிரிக்கா என்று சென்று கொண்டிருப்பார்கள்.
இன்னும்,
சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவில்லை
காணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லை
இடம் பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை
என்று தமிழ் மக்கள் கவலையில் இருக்கிறார்கள்.
ஆனால் தலைவர்களோ,
பாதி நாட்கள் இந்தியாவில் குடும்பம் நடத்துகிறார்கள்.
மீதி நாட்கள் வெளிநாடுகளுக்கு சுற்றலா செல்கிறார்கள்.
இவர்கள்,
பாணுக்கு பஞ்சம் வந்தபோது கேக் சாப்பிட சொன்ன ராணி அல்லர்.
ரோம் பற்றி எரியும்போது பிடில் வாசித்த மன்னர் அல்லர்.
அவர்களை விட மோசமானவர்கள். பயங்கரமானவர்கள்.

No comments:

Post a Comment