Sunday, January 31, 2016

•யானைகளுக்கும் சிறப்புமுகாம் அகதிகளுக்கும் சிறப்புமுகாம் "ஈழத்தாய்" ஜெயா அம்மையாரின் சாதனைகள் !!

•யானைகளுக்கும் சிறப்புமுகாம்
அகதிகளுக்கும் சிறப்புமுகாம்
"ஈழத்தாய்" ஜெயா அம்மையாரின் சாதனைகள் !!
கருணை உள்ளம் கொண்ட "அம்மா" அவர்கள் யானைகள் மீது இரக்கம் கொண்டு அவற்றுக்கு சிறப்புமுகாம் அமைத்துள்ளார்.
அங்கு யானைகள் காட்டு வாழ்க்கையை வாழலாம்.
குடும்பமாக சுதந்திரமாக நடமாடலாம்.
தாராளமாக உணவு உண்ணலாம்
அவற்றுக்கு மருத்தவ வசதி வழங்க ஒரு மருத்துவ முகாமே நிறுவப்பட்டுள்ளது.
ஆனால் அகதிகள் சிறப்புமகாமில்
அகதிகள் 24 மணி நேரமும் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குடும்பங்களை பிரித்து அடைக்கின்றனர்.
போதிய உணவு மட்டுமல்ல குடிதண்ணீர்கூட வழங்கப்படுவதில்லை
மருத்துவ வசதிகள் தரப்படுவதில்லை
ஈழத்தாய் ஜெயா அம்மையாரின் ஆட்சியில்
யானைகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகள்கூட
ஈழ அகதிகளுக்கு வழங்கப்படுவதில்லையே!
ஈழத் தமிழனாக பிறந்ததைவிட
தமிழ்நாட்டில் ஒரு யானையாகவாவது பிறந்திருக்கலாம்?

No comments:

Post a Comment