Sunday, January 31, 2016

•நாய்க் குட்டிகள் வாலாட்டுவது எலும்புத்துண்டுக்காகவேயொழிய எஜமான் மீது கொண்ட விசுவாசத்தினால் அல்ல!

•நாய்க் குட்டிகள் வாலாட்டுவது எலும்புத்துண்டுக்காகவேயொழிய எஜமான் மீது கொண்ட விசுவாசத்தினால் அல்ல!
ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியிலும் தமிழின அழிப்பு தொடர்கிறது என்று சர்வதேச சட்ட வல்லுனர் பேராசிரியர் பிரான்சிஸ் போயல் தெரிவித்துள்ளார்.
ஆனால் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக "மைத்திரி அரசு நல்லாட்சி புரிகிறது" என்று சம்பந்தர் அய்யா சேர்ட்டிபிக்கேட் கொடுக்கிறார்.
பல்லாயிரம் அப்பாவி தமிழ்மக்களை கொன்ற மகிந்த ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழ் மக்கள கோரி வருகிறார்கள்.
ஆனால் தமிழ் மக்களின் தலைவர் சம்பந்தர் அய்யாவோ "மகிந்த ராஜபக்ச ஒரு தேசிய தலைவர்" என்கிறார்.
தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய போராளிகளை பயங்கரவாதிகள் என்று அழைக்கும் சம்பந்தர் அய்யா, பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்ற மகிந்த ராஜபக்சவை தேசிய தலைவர் என்று மிகுந்த பாசத்துடன் அழைக்கிறார்.
தமது பதவி நலன்களுக்காகவும் தமது வர்க்க பாசத்திற்காகவும் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு பெரும் துரோகத்தினை சம்பந்தர் அய்யா செய்து வருகிறார்.
தனது சுயநலத்திற்காக வாழ்நாள் முழுவதும் தமிழ்மக்களுக்கு துரோகம் இழைத்த சம்பந்தர் அய்யா என்பவர் இங்கு உறங்குகிறார் என்றே அவர் கல்லறையில் பொறிக்கப்படும்.

No comments:

Post a Comment