Sunday, January 31, 2016

•இவன் தேச துரோகி என்றால் அவ்வாறே இருந்துவிட்டு போகட்டும்

•இவன் தேச துரோகி என்றால் அவ்வாறே இருந்துவிட்டு போகட்டும்
காலில் மிதிபடும் மண்புழு கூட துடித்து தன் எதிர்ப்பை காட்டுகிறது.
விளக்கில் விழும் விட்டில் பூச்சிகூட தன் எதிர்ப்பை காட்டுகிறது.
ஆனால் தமிழன் மட்டும் எதிர்ப்பு காட்டாமல் காலம் பூராவும் அடிமையாக இருக்க வேண்டும் என்றே இந்திய அரசு விரும்புகிறது.
இந்திய அரசு தமிழ் மக்களை அவமதிக்கிறது. என்றாலும் கொடியை எரிக்க கூடாது என்கிறார்கள்.
இந்திய அரசு தமிழ் மக்களை அலட்சியப்படுத்துகிறது. என்றாலும் கொடியை எரிக்க கூடாது என்கிறார்கள்.
இந்திய அரசு தமிழ்மக்களை புறக்கணிக்கிறது. என்றாலும் கொடியை எரிக்க கூடாது என்கிறார்கள்.
இந்திய அரசு தமிழ்மக்களை இழிவு படுத்துகிறது. என்றாலும் கொடியை எரிக்க கூடாது என்கிறார்கள்.
இந்திய அரசு தமிழ்மக்களுக்கு துரோகம் இழைக்கிறது. என்றாலும் கொடியை எரிக்க கூடாது என்கிறார்கள்.
இந்திய அரசு தமிழ்மக்களை வஞ்சிக்கிறது. என்றாலும் கொடியை எரிக்க கூடாது என்கிறார்கள்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்த குடி தமிழ் என்கிறார்கள்.
அப்படியென்றால் முதல் தோன்றிய குரங்கு தமிழ் குரங்கு என்று பல கோடி ஆண்டுக்கு முந்திய வரலாற்றை தெரிந்து கொண்டவர்களுக்கு அண்மைக்காலத்தில் இந்திய அரசு தங்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதை கண்டு கொள்ள தெரியவில்லையே!
இந்த இளைஞன் தமிழ் மக்களின் உணர்வையே வெளிப்படுத்தியுள்ளான்.
இவன் தேசத் துரோகி என்றால் அப்படியே இருந்தவிட்டு போகட்டும்.
ஏனெனில் இந்த தேசத் துரோகிதான் மழை வெள்ளத்தில் மக்களுக்கு உதவி செய்தவன்.

No comments:

Post a Comment