Sunday, January 31, 2016

இதுதான் இந்திய நீதி!

• இதுதான் இந்திய நீதி!
தோழர் சாய்பாபா. இவர் டில்லி பல்கலைக்கழக பேராசிரியர். இவர் ஒரு உடல் ஊனமுற்றவர். இவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் செய்த குற்றம்தான் என்ன?
பொலிசாரின் கொலைகளை சுட்டிக் காட்டியது குற்றமா?
மனிதவுரிமைக்காக குரல் கொடுத்தது குற்றமா?
இவர் மக்களின் பணம் 66 கோடியை ஊழல் செய்யவில்லை.
இவருக்கு 4 வருட தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.
இவர் எழுந்து நடமாடமுடியாத ஊனமுற்ற மனிதர்.
இருப்பினும் இவரை ஜாமீனில் விடமுடியாது என்றும்
மீண்டும் சிறையில் அடைக்கும்படி இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதாகரன். இவர் ஜெயா அம்மையாரின் முன்னாள் வளர்ப்பு மகன்.
இவர் மக்கள் பணம் 66 கோடியை ஊழல் செய்தவர்.
இவர் 4 வருட தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி.
நல்ல திடகாத்தரமான தடியன் இவர்.
ஆனாலும் உடல் நலம் இல்லாதவர் என்று இவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
4 வருட தண்டனை பெற்ற குற்றவாளிக்கு 21 நாட்களில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதற்தடவை.
ஒருபுறத்தில்,
ஆள் வைத்து கொலை செய்த காஞ்சி சங்கராச்சாரி விடுதலை
கார் ஏற்றிக் கொலை செய்த சல்மான்கான் விடுதலை
ஏ.கே 47 ஆயுதம் வைத்திருந்த சஞ்சய்தத் நன்னடத்தையில் விடுதலை
4 வருட தண்டனை பெற்ற ஜெயா அம்மையாருக்கு ஜாமீனில் விடுதலை
இதேபோல் வளர்ப்புமகன் சுதாகரனுக்கும் ஜாமீனில் விடுதலை
மறுபுறத்தில்,
ஊடல் ஊனமுற்ற சாய்பாவுக்கு ஜாமீன் விடுதலை இல்லை.
பற்றரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு நன்னடத்தை விடுதலை இல்லை
இதுதானா இந்திய நீதி?
குறிப்பு- இது நியாயமா எனக் கேட்ட எழுத்தாளர் அருந்ததிராய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment