Saturday, November 30, 2019

இது செருப்பு அல்ல. நெருப்பு

இது செருப்பு அல்ல. நெருப்பு
இதுவரை உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்தே ஆரம்பித்தது.
தமிழரசுக்கட்சியின் தமிழின துரோகத்திற்கு எதிராக இந்த தமிழ் பெண் வீசி எறிவது செருப்பு அல்ல நெருப்பு என்பதை காலம் நிச்சயம் காட்டும்.
7 மணித்தியாலமாக யோசித்து சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்திருப்பதாக சுமந்திரன் கூறியிருப்பது பச்சைப் பொய் ஆகும்.
உண்மை என்னவெனில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே ஜதேக வேட்பாளரையே ஆதரிப்பது என்ற முடிவை சுமந்திரன் எடுத்தவிட்டார்.
அதுமட்டுமல்ல இன்று இந்த முடிவை தமிழரசுக்கட்சியின் முடிவு என்று அறிவிப்பதற்கு முன்னரே கடந்த சில நாட்களாக சுமந்திரன் விசுவாசிகள் சஜித்திற்கு ஆதரவாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
சுமந்திரனும் அவரது விசுவாசிகளும் தாராளமாக சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கட்டும். ஆனால் என்ன காரணத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை தமிழ் மக்களுக்கு கூறவேண்டியது கடமையாகும்.
சுமந்திரனும் அவரது விசுவாசிகளும் தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்தால்கூட பரவாயில்லை. மாறாக தமிழர்களுக்கு மூளையே இல்லை என்று நினைக்கிறார்கள்.

No comments:

Post a Comment