Saturday, November 30, 2019

கரவெட்டி மதவடி நண்பன் ஒருவனை இழந்துவிட்டோம்

கரவெட்டி மதவடி நண்பன் ஒருவனை இழந்துவிட்டோம்
“பாலைய்யா” என்று எம் அனைவராலும் அழைக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் அவர்களை இழந்துவிட்டோம்.
சிறுவயது முதல் ஒன்றாக விளையாடினோம். ஒன்றாக குளத்தில் நீச்சல் அடித்தோம். ஒன்றாக கரவை இளைஞர் ஒன்றியம் கண்டோம். முக்கியமாக ஒன்றாக மதவடியில் இருந்திருக்கிறோம்.
அவர் புளட் இயக்கத்தில் இருந்தார். இருந்தாலும் பேரவை இயக்கத்தினரான எமக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்திருக்கிறார்.
1986ல் சென்னiயில் மடிப்பாக்கத்தில் எமது வீட்டில் தங்கியிருந்தபோது என்னை தேடி வந்த கியூபிராஞ் பொலிஸ் நான் இல்லை என்றவுடன் அங்கிருந்தவர்களை பிடித்து சென்றனர்.
அவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நண்பர் பாலைய்யாவும் ஒருவர். ஆனால் அதன்பின்னரும் அவர் எமக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்.
பழகுவதற்கு இனிமையானவர். அனைவருடனும் நட்பாக பழகுபவர். தன்னால் இயன்ற உதவிகளை செய்பவர்.
இத்தனை விரைவாக எம்மை விட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கவேயில்லை.
அவருக்கு எமது அழ்ந்த அஞ்சலிகள்.

No comments:

Post a Comment