Saturday, November 30, 2019

•கரடியே காரித் துப்பிடிச்சு!

•கரடியே காரித் துப்பிடிச்சு!
தமிழக தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என்று நாமல் ராஜபக்சா கூறியிருக்கிறார்.
இதைக் கூறுவதற்கு நாமல் ராஜபக்சாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்பது உண்மைதான்.
ஆனாலும் அவரே கூறித் தொலைக்கும் அளவிற்கு தமிழக தலைவர்கள்; இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
இதற்கு முன்னர் சரத்பொன்சேகாவும் தமிழக தலைவர்களை கோமாளிகள் என்று கூறினார்.
சிங்கள ஊடகங்கள் தமிழக முதல்வாரன ஜெயா அம்மையாரை நிர்வாணமாக படம் போட்டு கிண்டல் அடித்திருக்கின்றனர்.
ஈழத் தமிழருக்காக இதுவரை 17 தமிழக தமிழர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர். பல இளைஞர்கள் போராளிகளாக ஈழத்தில் வந்து போராடி மடிந்திருந்கின்றனர்.
உலகில் தமிழக தமிழர்கள் ஈழத் தமிழருக்காக செய்த அர்ப்பணிப்பு போல் வேறு எந்த இனமாவது தமது இனத்திற்கு செய்திருக்குமா என்று தெரியவில்லை.
ஆனாலும் அந்த தமிழக தமிழர்களின் தலைவர்களை கோமாளிகள் முதலைகள் என்றெல்லாம் எப்படி சிங்கள தலைவர்களால் கூற முடிகிறது?
அதுமட்டுமல்ல உலகில் 650 மீனவர்கள் இன்னொரு நாட்டு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதும் தமிழக மீனவர்கள் மட்டுமே.
இந்தியாவின் எதிரி நாடு என்று கூறப்படும் பாகிஸ்தான்கூட இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை.
ஆனால் இந்தியாவின் நட்பு நாடு என்று கூறப்படும் இலங்கை அரசு சர்வதேச சட்டங்களையும் மீறி தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளது.
உலகில் ஒன்றரைக் கோடி மட்டுமே உள்ள சிங்களவர்களின் அரசு ஏழரைக் கோடி தமிழர்களை எப்படி தைரியமாக கொல்கிறது?
ஒரேயோரு காரணம்தான். சிங்களவர்கள் ஒன்றரைக் கோடிப்பேர் என்றாலும் தமக்கென ஒரு நாடு வைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் ஏழரைக் கோடியாக இருந்தாலும் நாடு இன்றி அடிமையாகவே இருக்கிறார்கள்.
தமிழர்கள் தமக்கென ஒரு நாட்டையும் அரசையும் கொண்டிருந்தால் இப்படி தலைவர்களை இழிவுபடுத்த சிங்கள தலைவர்களுக்கு தைரியம் வருமா?
அதுமட்டுமல்ல இன்னொரு விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதே மாதிரி இந்தியாவில் உள்ள வேறு ஒரு இனத் தலைவர்களை வேறுநாட்டு தலைவர்கள் யாராவது இகழ்வாக பேசியிருந்தால் இந்திய அரசு மௌனமாக இருக்குமா?

No comments:

Post a Comment