Saturday, November 30, 2019

• மீனவர்தின வாழ்த்துக்கள்

• மீனவர்தின வாழ்த்துக்கள்
மீனவர்தினமான இன்றுகூட கச்சதீவு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 1500 தமிழக மீனவ வள்ளங்கள்; இலங்கை கடற்படையால் விரட்டப்பட்டுள்ளதாக செய்தி வருகிறது.
கச்சதீவு தமிழர்களுடையது. ஆனால் அதன் அருகில் மீன்பிடிக்க தமிழர்களுக்கு உரிமை இல்லை.
இதுவரை 650 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான்கூட இவ்வாறு இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்லவில்லை.
ஆனால் இந்தியாவின் நட்புநாடு எனக் கூறப்படும் இலங்கையானது சர்வதேச சட்டங்களுக்கு முரணாக தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்கிறது.
இந்திய அரசும்கூட கொல்லப்பட்டவர்கள் இந்திய மீனவர்கள் என்று அறிவிப்பதில்லை. மாறாக தமிழக மீனவர்கள் என்றே அறிவிக்கிறது.
அதுமட்டுமல்ல இந்த தமிழக மீனவர்களிடம் இருந்து பெறப்படும் வரிப்பணத்தில் அவர்களை கொல்லும் இலங்கை கடற்படைக்கு இந்திய அரசு பயிற்சி அளிக்கிறது.
இதுவரை இரண்டு பெரிய போர்க்கப்பல்களைக்கூட இந்திய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது. அதுவும் இலவசமாகவே வழங்கியுள்ளது.
அதனால்தான் கொஞ்சம்கூட பயம் இன்றி தைரியமாக இலங்கை அரசு தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்கிறது.
சிங்கள தலைவர்கள் தமிழக தலைவர்களை “முதலைகள்” என்றும் “கோமாளிகள்” என்றும் கிண்டல் செய்கின்றார்கள்.
இதற்கு காரணம் இந்தியாவில் தமிழர்கள் அடிமையாக இருப்பதே. தமிழ்நாடு தனிநாடாக மாறினால் இந்த நிலை மாறிவிடும்.
குறிப்பு -
இலங்கு இரும்பரப்பின் ஏறி சுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமிர் பரகுவர் - அகநானூறு 350

No comments:

Post a Comment