Saturday, November 30, 2019

கடந்தமுறை “பிசாசு” மகிந்தா வரக்கூடாது.

கடந்தமுறை “பிசாசு” மகிந்தா வரக்கூடாது. எனவே “பேய்” மைத்திரிக்கு வோட் போடுங்கள் என்றார்கள்.
இந்தமுறை “பிசாசு” கோத்தா வரக்கூடாது. “பேய்” சஜித்திற்கு வோட் போடுங்கள் என்கிறார்கள்.
வோட் போட்ட தமிழ் மக்களுக்கு ஒரு மயிரும் கிடைக்கவில்லை. ஆனால் போடச் சொன்னவர்களுக்கு சொகுசு பங்களா, சொகுசு வாகனம் எல்லாம் கிடைத்தது
.
இதோ இந்த குழந்தையிடம்தான் “பேய்” ஜனாதிபதி மைத்திரி “உன் அப்பா வருடப்பிறப்பிற்கு விடுதலையாகி வீட்டுக்கு வருவார்” என்று கூறியது.
எத்தனையோ வருடப்பிறப்பு வந்து போகிறது. ஆனால் அந்த பேய் வாக்குறுதி அளித்தபடி அந்த அப்பாவி தந்தை விடுதலை செய்யப்படவில்லை.
ஆனால் அந்த பேய் மைத்திரிதான் நீதிமன்றத்தை அவமதித்த பொதுபலசேனா புத்த பிக்குவை விடுதலை செய்திருக்கிறது.
ஒரு அரசியல் கைதியைக்கூட விடுதலை செய்விக்க முடியாதவர்கள் எந்த முகத்துடன் வந்து சஜித் பிரேமதாசாவுக்கு வோட் போடச் சொல்கிறார்கள்?
இவர்கள் தமிழ் மக்களை "முட்டாள்கள்" என்று நினைக்கவில்லை. மாறாக "மூளையே இல்லாதவர்கள்" என்று நினைக்கிறார்கள்.

No comments:

Post a Comment