Saturday, November 30, 2019

சிறீரெட்டி படிதாண்டா பத்தினியும் இல்லை

•சிறீரெட்டி படிதாண்டா பத்தினியும் இல்லை
உதயநிதி முற்றும் துறந்த முனிவனும் இல்லை.
படவாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் ஒரு நாள் முழுவதும் உதயநிதி ஸ்டாலின்; உடலுறவு வைத்திருந்தார் என்று நடிகை சிறீரெட்டி கூறியிருந்தார்.
இப்போது உதயநிதி ஸ்டாலினை நேரில்கூட பார்த்ததில்லை என்று அவர் பத்திரிகையாளர்களைக் கூட்டி தெரிவித்துள்ளார்.
நடிகை சிறீரெட்டி உதயநிதி ஸ்டாலினினால் மிரட்டப்பட்டிருக்கலாம். அல்லது அதிகளவு பணம் கொடுத்து சமாளிக்கப்பட்டிருக்கலாம்.
அதனால் அவர் பத்திரிகையாளர்களை கூட்டி இந்த மறுப்பை தெரிவித்திருக்கலாம்.
ஆனால் தமிழ் மக்கள் அக்கறை கொள்வதற்கு இதில் ஒரு விடயம் இருக்கிறது.
அதாவது இந்த நடிகை விரைவில் தமிழ்நாடு அரசியலில் குதிக்கப் போகிறாராம்.
இவர் தெலுங்கு நடிகை. ஒழுங்காக தமிழ் பேசகூட வரவில்லை. ஆனாலும் தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபடப் போகிறாராம்.
ஏற்கனவே நடிகர் ரஜனி தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறது என்றும் அதை தான் நிரப்பப்போவதாகவும் கூறியிருக்கிறார்.
நடிக்க வந்த இவர்கள் எல்லாம் தமிழனை ஆள நினைக்கிறார்கள். ஏனெனில் இந்தியாவில் தமிழன் மட்டும்தான் இளிச்சவாயனாக இருக்கிறான் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

No comments:

Post a Comment